இளைஞர் வெட்டிக்கொலை : மர்ம கும்பலால் அதிர்ச்சி சம்பவம்

இளைஞர் வெட்டிக்கொலை : மர்ம கும்பலால் அதிர்ச்சி சம்பவம்

மதுரையில் இளைஞர் வெட்டிக்கொலை : மர்ம கும்பலால் அதிர்ச்சி சம்பவம்

மதுரை மாவட்டம் மேலக்கள்ளந்திரி பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு இளைஞர் மீது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

இளைஞர் மீது தொடர்ச்சியாக அரிவாளால் வெட்டிய குற்றவாளிகள், அவர் ஓட முயன்றபோதும் பின்தொடர்ந்து பலத்த குத்துகள் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான காயங்களால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை. மர்ம கும்பலை அடையாளம் காணும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook