மதிப்பெண்ணில் பொறாமை. தாயாருக்கு ஆயுள் தண்டனை.

மதிப்பெண்ணில் பொறாமை. தாயாருக்கு ஆயுள் தண்டனை.

காரைக்கால்:

2022 ஆம் ஆண்டு காரைக்காலில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக, ஒரு பெண்ணுக்கு காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

அந்த ஆண்டு, காரைக்காலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், பெண்ணின் மகளுடன் 8-ம் வகுப்பு மாணவன் ஒருவர் போட்டியாளராக இருந்தார். இதனால் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக, அந்த மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் நடந்த நீண்ட விசாரணையின் பிறகு, குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பால், காரைக்கால் பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook