சந்தேக குற்றவாளிகள் இறந்தால் கொலை வழக்காக மாற்ற வேண்டும்.

சந்தேக குற்றவாளிகள் இறந்தால் கொலை வழக்காக மாற்ற வேண்டும்.

மதுரை இளைஞர் மரணம் விவகாரம் – அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா இடமாற்றம்!

மதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தினேஷ் என்ற இளைஞர், சில நாட்கள் கழித்து கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கைச் சுற்றி பல கேள்விகள் எழுந்த நிலையில், அண்ணா நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா தற்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை வழக்கின் விசாரணை மற்றும் நிர்வாக காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

“விசாரணை என்ற பெயரில் காவலர்கள் தாக்கி சந்தேக குற்றவாளிகள் உயிரிழப்பது தொடர்ந்தால், நீதி மன்றம் மற்றும் அரசு கடுமையாக தலையிட வேண்டும். இத்தகைய இறப்புக்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, தகுந்த தண்டனை அளித்தால் மட்டுமே இப்படிப்பட்ட இறப்புகள் குறையும்” என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook