சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒவ்வொரு நோய்களுக்கும், தனித்தனியாக பல கட்டிடங்களாக பிரித்து நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவம் வழங்கி வருகிறது. ஆனால், தங்கி மருத்துவம் பார்க்கும், நோயாளிகளுக்கு குடிதண்ணீர் வசதி இல்லை என்று நோயாளிகள் கவலைப்படுகின்றனர். பணம் உள்ளவர்கள் தண்ணீர் கேன் வாங்கி குடிப்பதாகவும், ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள், வெளியூரில் இருந்து வந்து தங்கி மருத்துவம் பார்க்கும் இல்லாதவர்கள். துணைக்கு ஆளில்லாத தனி நோயாளிகள் என பலரும், தன்ணீருக்கே கஷ்டப்படுவதாகவும், கவலைப்படுகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் அல்லது தமிழக அரசு உடனடியாக குடி தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து கொடுக்குமாறு நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.