வாய்க்காலில் மிதந்த பிரேதம்!

வாய்க்காலில் மிதந்த பிரேதம்!

காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

திருச்சி முடி கண்டம் கிராமம் மாயனூர் தஞ்சாவூர் கட்டளை வாய்க்காலில் முடி கண்டம் பாலம் மேற்கு குடி பிரிவு சாலை அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிரேதம் தண்ணீரில் மிதந்து கொண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மணிகண்ட காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தார்கள். சம்பவ இடத்தில் கட்டளை வாய்க்காலில் உடல் நீரில் மூழ்கி தோல் உரிந்த நிலையில் இருந்தது. இறந்து போன பெண் பிரேதத்தின் பெயர் விலாசம் ஏதும் தெரியவில்லை. மேற்படி நபர் பிரேதம் அரசு மருத்துவமனை அமரறையில் வைக்கப்பட்டது. பெயர் விலாசம் தெரியாத பெண் பிரேதம்

உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை யாரும் உரிமை கோரவில்லை. அந்நிலையில் மணிகண்ட காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் ஆரோக்கிய கிங்ஸ்லி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோக ஆசிரியர் விஜயகுமாருக்கு நல்லடக்கம் செய்ய தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி குழுமிக்கரை மயானத்தில் மணிகண்ட காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் முன்னிலையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook