ராஜேந்திர சோழன் கடற்படைப் பயணத்தின் 1000ஆம் ஆண்டு நினைவு நாணய சொற்பொழிவு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்

ராஜேந்திர சோழன் கடற்படைப் பயணத்தின் 1000ஆம் ஆண்டு நினைவு நாணய சொற்பொழிவு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்

பவள விழா கண்காட்சியில் வரலாற்று நாணயங்கள் மற்றும் தமிழர் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் நிகழ்ச்சி

 

திருச்சி:

சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் கடற்படைப் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நாணயத்தை மையமாகக் கொண்ட சிறப்பு சொற்பொழிவு, திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவள விழா கண்காட்சியில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் திறந்து வைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜார்ஜ் அமலரெத்தினம் தலைமை தாங்கினார். செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி டாக்டர் ஏ. கே. காஜா நஜிமுத்தீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது சாகிப், துணைச் செயலர் முனைவர் கே. அப்துஸ் சமது ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

 

முதுகலை மற்றும் தமிழாய்வு துறைகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியில் தமிழர் பாரம்பரிய புழங்கு பொருட்கள், சங்க கால மற்றும் சமகால நாணயங்கள், உலகப் பணத்தாள்கள், ஐந்திணைக் காட்சிகள், பாரம்பரிய உணவு தானியங்கள், தாவர சார்ந்த மதிப்புக்கூட்டு தயாரிப்புகள் போன்ற அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாணவர்கள், ஆர்வலர்கள் பலரும் இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் இளம் வழுதி ராஜேந்திர சோழரின் நினைவு நாணயத்தைப் பற்றி விரிவாக உரையாற்றினார். அவர் கூறியதாவது: 2025ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட ₹1000 மதிப்புள்ள புழக்கத்தில் விடப்படாத நினைவார்த்த வெள்ளி நாணயம், ராஜேந்திர சோழனின் கடற்படைப் பயணத்தின் 1000 ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில் வடிவமைக்கப்பட்டது. 99.9% தூய வெள்ளியில் தயாரிக்கப்பட்ட இந்த நாணயத்தில் சோழர்களின் அடையாளச் சின்னங்களான புலி, மீன், குடை பதிக்கப்பட்டுள்ளன என்றும், இது வரலாற்று சேகரிப்பாளர்களுக்கான சிறப்பு பதிப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது, முனைவர் ஜாகீர் உசேன், முனைவர் ஷே. நாகூர்கனி, முனைவர் அ. சையத் ஜாகீர் ஹசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். தமிழ்த்துறை பேராசிரியர்கள் முனைவர் க. சிராஜுதீன், பேரா. கா. முகமது இஸ்மாயில், முனைவர் ச.அ. சையத் அகமது பிரோசு, முனைவர் அ.மா. முகமது ஹாரிஸ், முனைவர் மு. ஜஹானாரா, முனைவர் சு. விஜயலட்சுமி, பேரா ரா. ரஜுலா, பேரா ச. செல்வி ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இத்துடன், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் சேகரிப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர். வரலாற்று ஆர்வலர் குழு தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணய சேகரிப்பாளர் பாண்டியன் முகமது ஜுபைர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், பிரிட்டிஷ் இந்திய நாணய சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook