சென்னை மற்றும் புறநகர பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களில் சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்று புறநகர் பகுதி உட்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அரும்பாக்கம், ஈக்காடுதாங்கல், கிண்டி, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், கீழ்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புறநகர் பகுதியான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில், மாதவரம், பூந்தமல்லி, மதுரவாயில் ,வானகரம், உள்பட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரண தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

