சிறைகளில் “செல்போன் கலாச்சாரம்” — பாதுகாப்புக்கு சவால்!

சிறைகளில் “செல்போன் கலாச்சாரம்” — பாதுகாப்புக்கு சவால்!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதி ஒருவர் ஆப்பிள் மாலை அணிந்தபடி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. சீனிவாஸ் எனப்படும் “குப்பாச்சி சீனா” என்ற கைதி சிறையில் மொபைல் போனில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை பதிவு செய்து வெளியிட்டிருப்பது, சிறை பாதுகாப்பு முறைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

சிறைகளில் மொபைல் போன்கள் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், கைதிகள் இதை எளிதில் பயன்படுத்துவது எவ்வாறு சாத்தியமாகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபோன்ற “செல்போன் கலாச்சாரம்” கடந்த சில ஆண்டுகளில் பல மாநில சிறைகளிலும் வெளிச்சம் பார்த்துள்ளது.

சென்னை புழல் சிறை, மதுரை மத்திய சிறை, தஞ்சாவூர் சிறை, கோயம்புத்தூர் சிறை உள்ளிட்ட இடங்களிலும் இதற்கு முன் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்திய விவகாரங்கள் வெளிவந்துள்ளன. சிலர் வீடியோக்களை வெளியிட்டதுடன், சிலர் சமூக வலைதளங்களில் நேரலை (Live) செய்ததும் பதிவாகியுள்ளது.

இதனால் சிறை நிர்வாகம், பாதுகாப்பு பணியாளர்கள், மற்றும் கைதிகளுக்கிடையேயான தொடர்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. கைதிகள் வசம் மொபைல் போன் சென்றடைவது “உள்ளக ஆதரவு” இல்லாமல் சாத்தியமல்ல என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போது பரப்பன அக்ரஹாரா சிறை சம்பவம் குறித்து கர்நாடகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறைகளில் மொபைல் போன் பரவலை ஒழிக்க புதிய கண்காணிப்பு முறைமைகள் அவசியம் என காவல் வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.

– சிறை நிர்வாகத்தில் கண்காணிப்பு குறைவு, பாதுகாப்பில் பிழை?

– கைதிகளின் கையில் “சொந்த உலகம்” உருவாகும் நிலை!

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook