துபாய்: உலகின் மிக உயர்ந்த கட்டடமாக விளங்கும் புர்ஜ் கலிபாவில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படம் ஒளிரச் செய்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான தூதரக மற்றும் பொருளாதார உறவுகள் வலுப்பெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியை கௌரவிக்கும் விதமாக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு, வெளிநாடுகளில் இந்தியாவின் வளர்ந்து வரும் மரியாதையையும், இந்தியா–ஐ.அ.அ. இடையேயான உறவின்
Category: அரசியல்
ஏர்போர்ட் மூர்த்தி கைது. கருத்து கூறியது பிடிக்காமல் விசிக கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர்.
சென்னை, செப்.9 – புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது கடந்த 6-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 4 பேர் தாக்குதல் நடத்தினர். சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே நடந்த மோதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2 பேர் காயமடைந்தனர். இருதரப்பும் மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததால், இருபுறத்துக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் நேற்று முன்தினம்
வக்கீல் வீட்டில் திருடிய த.வே.க. பெண் நிர்வாகி கைது
கன்னியாகுமரி மாவட்டம் அரும்பணியில் உள்ள வீட்டில், வக்கீல் விஜயகுமார் குடும்பத்துடன் தங்கியிருந்த த.வே.க. பெண்கள் நிர்வாகி அர்ஷிதா டிப்னி (28) மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தன்று, அர்ஷிதா தனது உடல்நிலை சரியில்லையென கூறி வீட்டு அறைக்குள் சென்றபோது, அங்கு இருந்த தங்க நகைகளை திருடியதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களில் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறிய அவர், அருகே 90 செ.மீ. தூரத்தில் நகைகளை புதைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
கொருக்குப்பேட்டையில் தூய்மை பணியாளர்கள் கைது
சென்னை, செப்.9 – மாநகராட்சி தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைத்ததை எதிர்த்து, ராயபுரம் மற்றும் திருவி.கா.நகர் மண்டலத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் நீண்டநாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கொருக்குப்பேட்டை ராஜீவ் காந்தி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று மாலை சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் போலீசாருக்கும் பணியாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து
சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சென்னை, செப்.2– சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். கே.கே.நகர், தி.நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் ஒரே நேரத்தில் தொடங்கிய இந்த சோதனையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், சான்றுகள் என்பன பறிமுதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு தொழிலதிபர் அரவிந்த் என்பவரின் இல்லத்திலும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனையால் அந்தந்த பகுதிகளில் பரபரப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகம் வருகை
சென்னை, செப்.1: இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (செவ்வாய்க்கிழமை) 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். சென்னைக்கு வருகை தரும் அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொள்கிறார். பின்னர் கவர்னர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி, மறுநாள் திருச்சியில் நடைபெறும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்
டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டி.ஜி.பி. பதவிக்கான காலம் நிறைவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே தகுதியான அதிகாரிகளின் பட்டியலை யுபிஎஸ்சிக்கு பரிந்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை பின்பற்றாமல், தமிழக அரசு வெங்கட்ராமனை சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமித்திருப்பது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி
டி.ஜி.பி நியமனத்தில் முறைகேடு: அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை, ஆக.31 – தமிழகத்தில் பொறுப்பு டி.ஜி.பி நியமனம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு முரணாக செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இந்தப் பதவிக்குத் தகுதியான 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வில் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் உரிமை மாநில அரசால் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். அண்ணாமலை தனது அறிக்கையில், “சட்டம் ஒழுங்கு காவல்துறை அமைப்பு நேர்மையுடனும், சட்டபூர்வமுமான நியமன முறைகளுடனும் இயங்க வேண்டும். ஆனால், தற்போதைய டி.ஜி.பி நியமனம்
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் சுப்பிரமணியன்
சென்னை, ஆக.31 – சென்னை மணலியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ்களை அவர் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் “மக்களை தேடி மருத்துவம்” திட்டம் ஏற்கனவே 2 கோடி பயனாளிகளை சென்றடைந்துள்ளதாகவும், இதற்காக ஐக்கிய மன்றம் விருதும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். முதல்வர்

