ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி முழு வீச்சில் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா அவர்கள் வாலாஜாபேட்டை மற்றும் அம்மூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர் படிவங்களை வழங்கி ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறப்பு திருத்தப்பணி, தகுதியான புதிய வாக்காளர்களை சேர்த்தல், உயிரிழந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் பெயர் நீக்கம், இரட்டைப்
Author: vnewstamil
நறுவீ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடைபயணம்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
வேலூர்: உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு பக்கவாதம் (Stroke) நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் “Walkathon 2025” என்ற பெயரில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமையேற்றார். வேலூர் மாநகர மேயர் சுஜாதா ஆனந்தகுமார் முன்னிலையில், வேலூர் எம்.எல்.ஏ. பி. கார்த்திகேயன் கொடியசைத்து நடைபயணத்தை தொடங்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவ
ஸ்ரீ வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்
திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில், 36ஆவது ஆண்டு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியின் திருக்கல்யாணம் இன்று (நவம்பர் 1) வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் திருமண வீட்டாராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. குப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினர் தலைமையேற்று விழாவை சிறப்பித்தனர். மேலும், ஏழாவது வார்டு மாநகர மன்ற உறுப்பினர் கே. கார்த்திக்,
கடலில் மூழ்கி உயிரிழப்பு – குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்:
பெரியகுப்பம் கடற்கரையில் 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு – குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு சென்னை: சென்னை அருகே உள்ள எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் இன்று ஏற்பட்ட துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழ் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த நான்கு பெண்கள் (அக். 31) மதியம் கடலில் குளிக்கச் சென்றனர். அந்த
ஆளுநர் ஒப்புதல்: 9 மசோதாக்களுக்கு அனுமதி!
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். அவற்றில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் மசோதா, மேலும் 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட “நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதா” உள்ளிட்டவை அடங்கும். அரசு நிர்வாகம், கல்வி மற்றும் நிதி தொடர்பான பல முக்கிய சட்ட மசோதாக்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ஆளுநரின் ஒப்புதலுடன் இம்மசோதாக்கள் தற்போது சட்டமாக அமலுக்கு
கல்லூரி மாணவி உட்பட 4 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கின
சென்னை, அக். 31: எண்ணூர் கடற்கரையில் ஒரே நேரத்தில் நால்வரின் சடலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை நேரத்தில் உள்ளூர் மக்கள் கடற்கரையில் நான்கு பெண்களின் உடல்கள் கரையொதுங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், மரணமடைந்தவர்களில் ஒருவர் வயது 17 ஆன கல்லூரி மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நண்பர்களுடன் எண்ணூர் கடற்பகுதிக்கு வந்து குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கியதாக கூறப்படுகிறது.
கொருக்குப்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் அருகே மதுவில் வாக்குவாதம் – கல்லால் அடித்து இளைஞர் காயம்
கொருக்குப்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் அருகே மதுவில் வாக்குவாதம் – கல்லால் அடித்து இளைஞர் காயம் சென்னை, அக். 26: சென்னையில் நண்பர்களுக்கு இடையேயான வாக்குவாதம் கடுமையான தகராறாக மாறி, ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு காயமடைந்தார். கொடுங்கையூர் எழில் நகர், பி-பிளாக், 8-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) எனும் இளைஞர் தனது நண்பர் சதீஷுடன் சுண்ணாம்பு கால்வாய் அருகே மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இருவருக்கும்
யூட்யூப் பார்த்து கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது
ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைத்த தங்க நகையை மீட்க வந்த நபர் கொடுத்த பணத்தில் ₹10,000 கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து, ராணிப்பேட்டை காவல் துறை 6 பேரை கைது செய்துள்ளது. வாலாஜாபேட்டை கடப்பரங்கையன் தெருவைச் சேர்ந்த முத்துராமன் (41) மற்றும் அவரது மனைவி கோசலை (38) ஆகியோர், கடந்த மே மாதத்தில் கோசலையின் 5 சவரன் தங்க
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர்
ராணிப்பேட்டை, அக். 30 – ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள மாம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இராஜா (வயது 36) மற்றும் நெமிலி வட்டம் தென்மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தன் (வயது 22) ஆகியோர் தங்களுக்குத் தேவையான சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மனு அளித்தனர். அந்த மனுவின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – 2000 கனஅடியில் இருந்து 4000 கனஅடியாக நீர்வெளேற்றம் உயர்வு
பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரிநீர் திறப்பு அதிகரிப்பு மோன்தா புயல் காரணமாக கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – 2000 கனஅடியில் இருந்து 4000 கனஅடியாக நீர்வெளேற்றம் உயர்வு திருவள்ளூர், அக். 27: மோன்தா புயலால் உருவாகியுள்ள கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்குத் திறக்கப்படும் உபரிநீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில்,

