மதுரை தாசில்தார் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது

மதுரை: கிரஷர் அமைப்பதற்கான அனுமதிக்காக ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் அவரது டிரைவர் ராம்கே என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More

தமிழகத்தில் ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள்

தமிழகத்தில் ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அலுவலகங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை. தீயணைப்புத் துறை மற்றும்மீட்பு பணிகள் துறை இயக்குனர். சீமா அகர்வால்.   வடமேற்கு மண்டலத்திற்குட்பட்ட தீயணைப்பு நிலையங்களின் வருடாந்திர ஆய்வு கூட்டம். இன்று வேலூர் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில்

Read More

வாகன ஓட்டிகளுக்கு அரிய வாய்ப்பு: TRAFFIC FINE-களை குறைக்கும் திட்டம்

சென்னை: வாகன ஓட்டிகள், உங்கள் நிலுவையில் உள்ள TRAFFIC FINE-களை முழுமையாக அல்லது 50% வரை குறைக்க அரிய வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பு 2025, செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய லோக் அதாலத் திட்டத்தின் போது வழங்கப்படுகிறது. ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாமை, சிக்னலில் நிற்காமல் செல்வது போன்ற 13 விதமான போக்குவரத்து விதிமீறல்களில் உங்கள் மீது விதிக்கப்பட்ட அபராதம் குறைக்கப்படும். இதற்காக, முதலில் National Legal

Read More

ஏர்போர்ட் மூர்த்தி கைது. கருத்து கூறியது பிடிக்காமல் விசிக கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர்.

சென்னை, செப்.9 – புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது கடந்த 6-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 4 பேர் தாக்குதல் நடத்தினர். சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே நடந்த மோதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2 பேர் காயமடைந்தனர். இருதரப்பும் மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததால், இருபுறத்துக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் நேற்று முன்தினம்

Read More

மதுரை வக்கீல் மரணம் தொடர்பாக போலீசாருக்கு அபராதம்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல் முருகேசன் (30) மரணத்திற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், வக்கீலை தவறாக கைது செய்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மனித உரிமை ஆணையம் இதை உறுதி செய்து, போலீசாரின் மீது நடவடிக்கை எடுக்கவும், மரணமடைந்த வக்கீலின் குடும்பத்திற்கு ₹2.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு

Read More

காதலனுடன் சென்ற இளம்பெண் – கூட்டுப் பாலியல் பலாத்காரம்; 3 வாலிபர்கள் அதிரடி கைது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள ராணிப்பேட்டை பகுதியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 19 வயது இளம்பெண், தனது காதலனுடன் சேர்ந்து வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள பஸ்ஸ்டாண்டுக்கு சென்றிருந்தார். அப்போது மூவர் கொண்ட கும்பல், அவர்களை மிரட்டி, அருகிலிருந்த தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், இளம்பெண்ணை கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண் புகாரளித்ததை அடுத்து, போலீசார் உடனடியாக விசாரணை நடத்தினர். அதில் சம்பவத்தில் ஈடுபட்டதாக

Read More

வக்கீல் வீட்டில் திருடிய த.வே.க. பெண் நிர்வாகி கைது

கன்னியாகுமரி மாவட்டம் அரும்பணியில் உள்ள வீட்டில், வக்கீல் விஜயகுமார் குடும்பத்துடன் தங்கியிருந்த த.வே.க. பெண்கள் நிர்வாகி அர்ஷிதா டிப்னி (28) மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தன்று, அர்ஷிதா தனது உடல்நிலை சரியில்லையென கூறி வீட்டு அறைக்குள் சென்றபோது, அங்கு இருந்த தங்க நகைகளை திருடியதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களில் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறிய அவர், அருகே 90 செ.மீ. தூரத்தில் நகைகளை புதைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Read More

கொருக்குப்பேட்டையில் தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை, செப்.9 – மாநகராட்சி தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைத்ததை எதிர்த்து, ராயபுரம் மற்றும் திருவி.கா.நகர் மண்டலத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் நீண்டநாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கொருக்குப்பேட்டை ராஜீவ் காந்தி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று மாலை சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் போலீசாருக்கும் பணியாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து

Read More

நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா!

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் இனிய நந்தவனம் வாசகர் வட்டம் சார்பில் கவிஞர் முபாரக் எழுதிய நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்து நதிகள் செய்பவன் கவிதை நூலை வெளியிட திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசன தலைவர் முகமது சபி நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

Read More

புகார் மீது நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி கைது.

காஞ்சிபுரம் சட்டம் ஒழுங்கு டிஎஸ்பி சங்கர் கணேஷ், நீதிமன்ற உத்தரவின் பேரில் சீருடையுடன் நேரடியாக கைது செய்யப்பட்டார். முருகன் என்ற நபர் அளித்த புகாரில், ஒரு மாதமாக நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில், எஸ்சி/எஸ்டி தடுப்புச் சட்டம் பிரிவின் கீழ் டிஎஸ்பி சங்கர் கணேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது. காஞ்சிபுரம் நீதிமன்றம், அவரை வரும் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்த அதிர்ச்சி

Read More

Facebook