எண்ணூரில் சாக்கடை பிரச்னை – மக்கள் வேதனை. கண்டுகொள்ளாத அதிகாரிகள்.

எண்ணூர் ராமகிருஷ்ணா நாலாவது தெரு பகுதியில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி கொண்டே வருகிறது. இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. கழிவுநீர் சாலையில் வழிந்து தேங்குவதால் அப்பகுதியில் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நிலவி வரும் சுகாதார அசௌகரியத்தை உடனடியாக தீர்க்க மாநகராட்சி உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த

Read More

பரங்கிமலையில் போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை

ஆலந்தூர், ஆக.31 – சென்னையை அடுத்த பரங்கிமலை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் மத்திய குற்றப்பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்த சந்திரமோகன் (46) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திரமோகனுக்கு மனைவி ஜெனிபர் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த வாரம் மனைவி, மகள்களுடன் சொந்த ஊரான கேரளா சென்றிருந்தனர். இதையடுத்து, முன்னொரு நாள் இரவு ஜெனிபர் கணவருக்கு பலமுறை தொலைபேசி செய்தும் பதில் வராததால்

Read More

பெரம்பூரில் என்ஜினீயரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

சென்னை, ஆக.31– பெரம்பூர் வடிவேல் தெருவில், சென்னை மாநகராட்சியின் சார்பில் தனியார் நிறுவனம் மூலம் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் அண்ணாநகரை சேர்ந்த ராமன் (26) எனும் இளைஞர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த இரவு, கட்டுமானப் பொருட்களை காக்கும் போது மர்ம நபர்கள் இருவர், அங்கிருந்த இரும்புக் கம்பிகளை திருட முயன்றுள்ளனர். அதை தடுத்த ராமனை, கத்தி காட்டி மிரட்டி, அவரிடம்

Read More

மருத்துவர் 7 பெண் நோயாளிகளை மயக்கமருந்து கொடுத்து பலாத்காரம் செய்த வழக்கு: 24 ஆண்டு சிறை தண்டனை

வாஷிங்டன், ஆக.31– அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர் ஜி.ஆலன் செங் மீது 7 பெண் நோயாளிகளை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு ஒரு பெண் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க அவரது வீட்டுக்கு சென்றிருந்த ஆலன், சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது. சம்பவம் குறித்து அந்த பெண் தனது வீட்டு கண்காணிப்பு கேமரா

Read More

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு வாலாஜா பைபாஸ் சாலை அருகிலுள்ள தமிழ் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில், வருவாய் துறை அலுவலர்களுக்கான சிறப்பு பணிபதுகாப்பு சட்டம், கருணை அடிப்படையிலான பணியிலக்கு 5% இலிருந்து 25% ஆக உயர்த்துதல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஜே.கே. விஜயசேகர் தலைமை வகிக்க, மாநில பொருளாளர் வி.தியாகராஜன்

Read More

டி.ஜி.பி நியமனத்தில் முறைகேடு: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை, ஆக.31 – தமிழகத்தில் பொறுப்பு டி.ஜி.பி நியமனம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு முரணாக செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இந்தப் பதவிக்குத் தகுதியான 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வில் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் உரிமை மாநில அரசால் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். அண்ணாமலை தனது அறிக்கையில், “சட்டம் ஒழுங்கு காவல்துறை அமைப்பு நேர்மையுடனும், சட்டபூர்வமுமான நியமன முறைகளுடனும் இயங்க வேண்டும். ஆனால், தற்போதைய டி.ஜி.பி நியமனம்

Read More

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் சுப்பிரமணியன்

சென்னை, ஆக.31 – சென்னை மணலியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ்களை அவர் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் “மக்களை தேடி மருத்துவம்” திட்டம் ஏற்கனவே 2 கோடி பயனாளிகளை சென்றடைந்துள்ளதாகவும், இதற்காக ஐக்கிய மன்றம் விருதும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். முதல்வர்

Read More

பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பதவியேற்றார்

சென்னை, ஆக.31 – தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ். இன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி பதவிக்கு ஐ.பி.எஸ் அதிகாரி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கட்ராமன் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தன்னுடைய முழு திறனையும் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

Read More

தோழி மிரட்டியதால் மாணவி தற்கொலை

கடலூர், ஆக.31 – கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் வசித்து வந்த 18 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கடலூர் அருகே உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்த அவர், அதே கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த ரெட்டிச்சாவடி பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவியுடன் நெருக்கமாக பழகி வந்தார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனவருத்தம் ஏற்பட்டதாக

Read More

கண்டக்டர்களிடம் சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனை – எம்டிசி பரிசீலனை

சென்னை, ஆக.31 – சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சார்பில் தற்போது சிங்கார சென்னை பயண அட்டைகள், குறிப்பிட்ட விற்பனை மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இனி பயணிகள் நேரடியாக பேருந்து கண்டக்டர்களிடமிருந்தே இவ்வட்டைகளை வாங்கும் வசதி ஏற்படுத்தும் வகையில் எம்டிசி பரிசீலித்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள மாதாந்திர பஸ் பயண அட்டைகள் தற்போது எம்டிசி

Read More

Facebook