சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி மீது நிர்வாக நடவடிக்கை எடுக்க விசிலன்ஸ் பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, மாவட்ட நீதிபதி சங்கர் கணேஷுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்க தேவையான விசாரணையை உறுதி செய்வதற்காக அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் விசிலன்ஸ் பதிவாளர் சமர்பிக்கும் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு மற்றும்
Author: vnewstamil
காவல் உதவி ஆய்வாளர் கைது. பெண்ணை கொலை செய்ய முயன்றதால்.
தருமபுரி அருகே அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுடன், அங்கு பணியாற்றிய துணை காவல் ஆய்வாளர் (SSI) தவறான தொடர்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், அந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்த நிலையில், சம்பவம் வெளிச்சம் பார்க்காமல் தடுக்கும் நோக்கில் பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக குற்றம்
16 வயது சிறுவன் தாக்கப்பட்டு உயிரிழப்பு
சென்னை வில்லிவாக்கத்தில் வேகமாக பைக்கில் சென்றதால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 16 வயது சிறுவன் ஹர்ஷ வர்தன் கற்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூரைச் சேர்ந்த ஹர்ஷ வர்தன் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், 4 சிறுவர்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிலரை தேடிச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப்
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!
தமிழ் சினிமாவிலும் தொலைக்காட்சித் துறையிலும் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிய பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) இன்று காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (செப்டம்பர் 18) மரணமடைந்தார். தொலைக்காட்சியில் நடக்கும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற ரோபோ சங்கர், பின்னர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும், சில படங்களில்
திருப்பத்தூர் அருகே ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
திருப்பத்தூரை அடுத்த காக்கனாம்பாளையத்தில், ஆந்திராவில் இருந்து கடத்தி கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்தனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு, செம்மரக் கடத்தல் மன்னர்களின் கூடாரமாக மாறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
புர்ஜ் கலிபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடி!
துபாய்: உலகின் மிக உயர்ந்த கட்டடமாக விளங்கும் புர்ஜ் கலிபாவில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படம் ஒளிரச் செய்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான தூதரக மற்றும் பொருளாதார உறவுகள் வலுப்பெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியை கௌரவிக்கும் விதமாக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு, வெளிநாடுகளில் இந்தியாவின் வளர்ந்து வரும் மரியாதையையும், இந்தியா–ஐ.அ.அ. இடையேயான உறவின்
பழங்குடியின பெண் கண்டெடுத்த 3 வைரங்கள்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள வைரச் சுரங்கத்தில், ராஜ்பூரை சேர்ந்த பழங்குடியின பெண் வினிதா கோண்ட் 3 வைரங்களை கண்டெடுத்துள்ளார். வினிதா மற்றும் சிலர் குத்தகைக்கு எடுத்திருந்த அந்தச் சுரங்கத்தில், 1.48 காரட், 20 சென்ட் மற்றும் 7 சென்ட் எடை கொண்ட வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை விரைவில் ஏலத்திற்கு விடப்படவுள்ளன. பல லட்ச ரூபாய்களுக்கு இவை ஏலம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வைர
சபரிமலை கோயிலில் தங்கம் எடை குறைவு – உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு
சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தங்கத்தில் காப்பர் கலந்துள்ளதால், அதன் எடை குறைந்ததாக புகார் எழுந்துள்ளது. மொத்தம் நான்கரை கிலோ தங்கம் இந்த சிலைகளுக்கு வழங்கப்பட்டதாகும். ஆனால், தற்போது எடை குறைவாக இருப்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கண்காணிப்புத் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளருக்கு லட்சியம் படைப்பாளர் விருது!
லட்சியம் படைப்பாளர் களம் சார்பில் சமூக செயற்பாட்டாளருக்கு லட்சியம் படைப்பாளர் விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. லட்சியம் படைப்பாளர் களம் நிறுவனர் சதாசிவம் தலைமை வகித்து பேசுகையில், லட்சியம் படைப்பாளர் களம் கற்றதையும் பெற்றதையும் மற்றவருக்கு வழங்கி அறிவுச்சுடர் ஏற்ற உள்ள களமாகும். வாழ்வியல் முன்னேற்றம் அனைவருக்கும் தேவை. ஒவ்வொருவருக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் லட்சியம் படைப்பாளர் களம் செயல்படுகிறது. அவ்வகையில் காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்று

