காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் உயிரிழப்பு: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகிறது – டி.டி.வி. தினகரன் கண்டனம்

காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் உயிரிழப்பு: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகிறது – டி.டி.வி. தினகரன் கண்டனம்

எழும்பூரில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் உயிரிழப்பு: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகிறது – டி.டி.வி. தினகரன் கண்டனம்

 

சென்னை, ஜூலை 26:

சென்னை எழும்பூரில் அடையாளம் தெரியாத போதைப் பொருள் கும்பலால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது, காவல்துறையினரிடையே மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மக்கள் முன்னணி தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர், டி.டி.வி. தினகரன் ஆழ்ந்த இரங்கலையும், கடுமையான கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.

 

“ஒரு காவல் அதிகாரி தாக்கப்பட்டு உயிரிழந்தும், ஒரு வாரமாக குற்றவாளிகள் கைது செய்யப்படாத இந்த நிலையிலே, தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தலையாய நகரமான சென்னை நகரின் எழும்பூர் பகுதியில், காவல்நிலையத்துக்கு அருகாமையில் நடைபெற்ற இந்த தாக்குதல், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக விளக்குகிறது என அவர் தெரிவித்தார். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூட அடிக்கடி கொலைகள், தாக்குதல்கள் நடைபெறுவது கவலைக்கிடமான நிலை என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், தினகரன், காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் விற்பனை, சட்டவிரோத மது விற்பனை, கூலிப்படைகளின் அட்டூழியம் ஆகியவை பொதுமக்களின் வாழ்க்கையை அச்சுறுத்தி வருகின்றன. இந்தச் செயல்களை அடியோடு ஒழிக்க உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” எனவும் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook