முதலாம் ஆண்டு மாணவர் தாக்குதல் – 6 மூத்த மாணவர்கள் மீது வழக்கு

முதலாம் ஆண்டு மாணவர் தாக்குதல் – 6 மூத்த மாணவர்கள் மீது வழக்கு

ஜார்கண்டில் ராகிங்: முதலாம் ஆண்டு மாணவர் தாக்குதல் – 6 மூத்த மாணவர்கள் மீது வழக்கு

 

ராஞ்சி, செப்.1 –

ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் முருபண்டா கிராமத்தில் செயல்பட்டு வரும் ராம்கர் இன்ஜினீயரிங் கல்லூரியில் ராகிங் சம்பவம் இடம்பெற்றது.

கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவரை, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர், கல்லூரி ராகிங் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட 6 மூத்த மாணவர்களை எதிர்த்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதே நேரத்தில், கல்லூரி ராகிங் தடுப்பு பிரிவு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி, சம்பவத்தில் குற்றம் புரிந்த மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook