பெரம்பூரில் என்ஜினீயரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

பெரம்பூரில் என்ஜினீயரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

சென்னை, ஆக.31–

பெரம்பூர் வடிவேல் தெருவில், சென்னை மாநகராட்சியின் சார்பில் தனியார் நிறுவனம் மூலம் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணியில் அண்ணாநகரை சேர்ந்த ராமன் (26) எனும் இளைஞர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த இரவு, கட்டுமானப் பொருட்களை காக்கும் போது மர்ம நபர்கள் இருவர், அங்கிருந்த இரும்புக் கம்பிகளை திருட முயன்றுள்ளனர். அதை தடுத்த ராமனை, கத்தி காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து ராமன் அளித்த புகாரின் பேரில், செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி, புளியந்தோப்பை சேர்ந்த செல்வகுமார் (26), வியாசர்பாடியை சேர்ந்த பிரசாந்த் (26) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பெரம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook